எனக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பில்லை...! பகிரங்கமாக அறிவித்த ட்ரம்ப்
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன.
இதனடிபடையில் ஜெஃப்ரி எப்ஸ்டீன், பிறருக்கும் மற்றும் தனக்குத்தானேவும் அனுப்பிய மின்னஞ்சல்கள் மற்றும் காவல்துறை விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அடங்கிய 35 லட்சம் பக்கங்கள் கொண்ட கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டிருந்தது.
குற்றச்சாட்டுகள்
இதில், ட்ரம்ப் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அத்தோடு, பாதிக்கப்பட்டவர்கள் எனச் சிலர் அளித்த வாக்குமூலமும் குறித்த ஆவணக் கோப்புகளில் இடம்பெற்றிருந்தன.
இந்த விவகாரத்தில் ட்ரம்புக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு எதிராகப் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
பல்வேறு தரப்பினர்
இது தொடர்பில் தற்போது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களுக்கு ட்ரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “எப்ஸ்டீன் விவகாரத்தில் நான் மறைக்க எதுவும் இல்லை.

நான் விடுவிக்கப்பட்டேன் மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.
எப்ஸ்டீன் வழக்கில் நான் முற்றிலும் விடுவிக்கப்பட்டேன் உண்மையில், சிலருடன் சேர்ந்து நான் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்று ஜெஃப்ரி எப்ஸ்டீன் போராடினார்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 நாட்கள் முன்