மத்திய கிழக்கில் புதிய ஆரம்பம்: இஸ்ரேல் நாடாளுமன்றில் ட்ரம்ப் உரை
மத்திய கிழக்கில் ஒரு புதிய ஆரம்பத்தை உருவாக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் இன்று (13.10.2025) உரையாற்றும் போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாடாளுமன்றமும் அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பின் அமைதிக்கான முயற்சிகளுக்கு இதன்போது நன்றி தெரிவித்தது.
இஸ்ரேல் பிரதமருக்கு நன்றி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (13.10.2025) பிற்பகல் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த ட்ரம்ப், “இஸ்ரேல் - காசா அமைதி ஒப்பந்தத்திற்கு உதவிய இஸ்ரேல் பிரதமருக்கும் மற்றும் பாடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என தெரிவித்தார்.
பணயக் கைதிகள் விடுவிப்பு
இதேவேளை, காசா பகுதியில் நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் இன்று தங்கள் பிடியில் இருந்த அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் விடுவித்தது.
மேலும் இஸ்ரேல் கிட்டத்தட்ட 2,000 பலஸ்தீன கைதிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
