முடிந்தது புடினின் கதை!! மனம் மாறிய ட்ரம்ப்: உக்ரைன் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நீண்ட காலமாக கொண்டிருந்த நட்பு முறிந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2024 தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முன்பே, “பதவியில் சேர்ந்தவுடன் 24 மணிநேரத்தில் ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்”, என்று உறுதிபட கூறிய ட்ரம்ப், பதவியேற்று ஏழு மாதங்கள் கடந்தும் உக்ரைனில் போர் தொடர்கிறது.
இந்த நிலையில், புடினை கடுமையாக விமர்சித்துள்ள ட்ரம்ப், புடின் மிகவும் நன்றாகப் பேசுகிறார்… ஆனால் பிறகு குண்டுவீசுகிறார், அதனால் நான் மிகவும் அதிருப்தியடைந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு ஆயுத உதவி
“அவரிடமிருந்து நாங்கள் நிறைய பொய்கள் கேட்கிறோம். அவர் பேசும்போது மென்மையாக பேசுவார், ஆனால் அதற்கெல்லாம் அர்த்தமே இல்லை” என்றும் ட்ரம்ப் புடினை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, உக்ரைனுக்கு 'பேட்ரியட்' (Patriot) வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆயுதங்களை நேட்டோ அமைப்பே பணம் செலுத்தி வாங்கும் புதிய திட்டம் நடைமுறையாகும் என்றும், இது அமெரிக்காவுக்கு வணிக வாய்ப்பாகவும் இருக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் நகர்வுகள்
இந்நிலையில், முன்பு, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை விமர்சித்து, "உங்களைவிட 20 மடங்கு பெரிய நாட்டை எதிர்த்து போருக்கு செல்லக் கூடாது" என கூறியிருந்த ட்ரம்ப், தற்போது உக்ரைனுக்கேத ஆதரவு அளிக்கத் தொடங்கியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், ட்ரம்ப் – நேட்டோ புதிய செயலாளர் மார்க் ருட்டே ஆகியோர் சந்திக்க உள்ளனர். அதே நேரத்தில், அமெரிக்க தூதுவர் உக்ரைனை நோக்கி புறப்பட்டுள்ளார்.
இது, அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றி, உக்ரைனுக்கு மீண்டும் முழுமையான ஆதரவு தரும் எண்ணத்தில் இருப்பதை காட்டுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

