ஜெலன்ஸ்கியின் எதிர்ப்புக்கு மத்தியில் ட்ரம்பின் அதிரடி பரிந்துரை
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர 28 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்தை அதிபர் ட்ரம்ப் பரிந்துரை செய்தார்.
இந்தநிலையில், ட்ரம்ப்பின் இந்தப் பரிந்துரைகள் ரஷ்யாவுக்கு சாதகமாகவும் மற்றும் உக்ரைனுக்கு பாதகமாகவும் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா மேற்கொண்டு நடவடிக்கைகள் மீதான நன்றியை உக்ரைன் மறந்துவிட்டதாக ட்ரம்ப் கடுமையாக சாடியிருந்தார்.
ஜெனீவாவில் உக்ரைன் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தநிலையில் அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரஷ்யாவிற்கும் மற்றும் உக்ரைனுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படுவது உண்மையில் சாத்தியமா ?
நீங்கள் அதைப் பார்க்கும் வரை நம்பாதீர்கள் ஆனால் ஏதாவது நல்லது நடக்கலாம், அமெரிக்காவை கடவுள் ஆசீர்வதிப்பார்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |