ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு பேரிழப்பு! முக்கிய தலைவரை வீழ்த்தியது அமெரிக்கா
ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் உலகளாவிய ரீதியிலான இரண்டாவது முக்கிய தலைவரான அபூ பிலால் அல்-மினுகி (Abu Bilal al-Minuki) கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கப் படைகளும் நைஜீரிய ஆயுதப் படைகளும் இணைந்து நடத்திய கூட்டு இராணுவ நடவடிக்கை ஒன்றின் போதே அவர் கொல்லப்பட்டதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அபூ பிலால் அல்-மினுகி கொல்லப்பட்ட இந்தச் செய்தியை ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவொன்றின் மூலம் உலகிற்கு அறிவித்துள்ளார்.
அதிநவீன கூட்டு நடவடிக்கை
"இன்று இரவு, எனது வழிகாட்டுதலின் கீழ், துணிச்சலான அமெரிக்க இராணுவமும் நைஜீரிய ஆயுதப் படைகளும் இணைந்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதியை போர்க்களத்தில் இருந்து ஒழிப்பதற்கான மிகத் துல்லியமான மற்றும் அதிநவீன கூட்டு நடவடிக்கையொன்றை மிகச் கச்சிதமாக நிறைவேற்றியுள்ளனர்.
இனி அவனால் ஆப்பிரிக்க மக்களை அச்சுறுத்தவோ அல்லது அமெரிக்கர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு திட்டமிடவோ முடியாது" என்று ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்பிரிக்காவில் தலைமறைவு
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இரண்டாவது முக்கிய தலைவரான அபூ பிலால் அல்-மினுகி, ஆப்பிரிக்காவில் தலைமறைவாக இருந்த நிலையிலேயே கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த கூட்டு இராணுவ நடவடிக்கைக்கு வழங்கிய பங்களிப்பிற்காக நைஜீரிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |