கமேனியின் இறுதிச் சடங்கில் கதறி அழும் மக்கள்! அதிர்ச்சியில் ட்ரம்ப்
ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமெனியின் இறுதிச் சடங்கில் அந்நாட்டு மக்கள் அழுததைக் கண்டு தான் பெரும் அதிர்ச்சியடைந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானிய மக்கள் பொதுவாக கமெனியை வெறுப்பதாகவே தான் நினைத்திருந்ததாக ட்ரம்ப ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
யாருமே மிஞ்ச மாட்டார்கள்
குறித்து ஊடகத்துடன் தொலைபேசி வாயிலாகப் பேசிய ட்ரம்ப், இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அனைவரையும் அமெரிக்க ராணுவத்தால் முற்றிலும் ஒழித்துக்கட்ட முடியும் என்றாலும், தனது அச்சுறுத்தலைச் செயல்படுத்தினால் எதிர்காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அங்கு யாருமே மிஞ்ச மாட்டார்கள் என்பதால் அந்த முடிவைக் கைவிட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும், கமெனியின் இறுதிச் சடங்கு முடியும் வரை இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடைபெறும் காலக்கட்டத்தில் இரு தரப்பினரும் எந்தவிதத் தாக்குதல்களும் நடத்த மாட்டார்கள் என ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |