"இன்று இரவு ஒரு முழு நாகரிகம் அழியும்": ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,ஈரானுக்கு விதித்த கெடு நெருங்கி வரும் நிலையில், "இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழியும்" என்று கூறி, ஈரானுக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
"இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழியும், அதை மீண்டும் ஒருபோதும் மீட்க முடியாது. அது நடக்க நான் விரும்பவில்லை, ஆனால் அது அநேகமாக நடக்கும்," என்று ட்ரம்ப் 'ட்ரூத் சமுக' தளத்தில் பதிவிட்டுள்ளார்
புரட்சிகரமான அற்புதம் நிகழலாம்
இருப்பினும், இப்போது ஒரு முழுமையான ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருப்பதாலும், அங்கு மாறுபட்ட அறிவுக்கூர்மை கொண்ட மற்றும் பயங்கரவாத ஆதரவு அற்ற சிந்தனைகள் மேலோங்கி நிற்பதாலும் ஒருவேளை புரட்சிகரமான அற்புதம் நிகழலாம்.உலகின் நீண்டமற்றும் சிக்கலான வரலாற்றின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றான இன்றிரவே அதற்கான விடையை நாம் அறிந்து கொள்வோம்.

47 ஆண்டுகால மிரட்டல் ஊழல் மற்றும் மரணங்கள் ஆகியன இன்று இரவோடு முடிவுக்கு வரும். ஈரானின் மகத்தான மக்களுக்கு இறைவன் அருள் புரிவார். இவ்வாறு ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குள் (கிழக்கு நேரப்படி) ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால், ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்று கூறி, அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களையும் பிற பொது உள்கட்டமைப்புகளையும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் முன்னதாக அச்சுறுத்தியிருந்தார்.

ட்ரம்ப் இதற்கு முன்னர் பல காலக்கெடுக்களை நிர்ணயித்துள்ளார், ஆனால் அவை பின்னர் மாற்றப்பட்டுள்ளன. அத்தகைய உள்கட்டமைப்புகளைத் தாக்குவது ஒரு போர்க்குற்றமாக அமையக்கூடும் என்ற கவலைகளை ஜனாதிபதியும் வெள்ளை மாளிகையும் நிராகரித்துள்ளன.
அமெரிக்கா சிவப்பு கோடுகளை தாண்டினால் ஏற்படப்போகும் பேரழிவு : ஈரான் புரட்சிகர படை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |