நெருப்புடன் விளையாடுகிறார் புடின்: ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) நெருப்புடன் விளையாடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியதற்காக புடின் மீது ட்ரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தார்.
இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதள பதிவு குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோசமான சம்பவங்கள்
குறித்த பதிவில் மேலும் தெரவிக்கப்பட்டுள்ளதாவது, நான் மட்டும் இல்லையென்றால், ரஷ்யாவிற்கு ஏற்கனவே நிறைய மோசமான சம்பவங்கள் நடந்திருக்கும் என்பதை புடின் உணரவில்லை.
நான் சொல்வது மிகவும் மோசமானது, அவர் நெருப்புடன் விளையாடுகிறார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யா - உக்ரைன் இடையே மிகவும் மோசமான அளவில் போர் நடைபெற்று வருகின்றது.
தீவிர அமைதி
அமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவியேற்றதும் இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இரு நாட்டு தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதில் முடிவு எட்டப்படவில்லை.
ஆனால், ட்ரம்ப்பின் தீவிர அமைதி முயற்சிக்கிடையிலும் உக்ரைன் மீது ரஷ்யா தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகின்றது.
ட்ரோன் தாக்குதல்
இருந்தாலும் இதுதொடா்பாக புடினை விமா்சிப்பதை ட்ரம்ப் பெரும்பாலும் தவிா்த்துவந்தார்.
இந்தச் சூழலில், கீவ் நகரைக் குறிவைத்து ரஷ்யா இதுவரை இல்லாத ட்ரோன் தாக்குதலை சனிக்கிழமை இரவு நடத்திய நிலையில், இதில் 13 போ் பலியாகினர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து புடின் மீது அதிருப்தி தெரிவித்திருந்த ட்ரம்ப், மீண்டும் இவ்வாறு கடுமையாக சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
