மன்னாரில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்

Tsunami Tamils Mullaitivu Sri Lanka
By Sathangani Dec 26, 2024 05:22 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

மன்னாரில் சுனாமி நினைவேந்தல் 

சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டது.

முன்னாள் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது.

சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 10.25 மணியளவில் குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் பெனடிற், ரொலோ இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் வசந்த், மன்னார் நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ், கடற்றொழிலாளர்கள்,வர்த்தகர்கள், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இணைந்து சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மன்னாரில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல் | Tsunami Commemoration Held In Puthukkudiyiruppu

20 ஆவது வருட நினைவேந்தல்

இதேவேளை சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்டு 20 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (26) மன்னார் மாவட்டச் செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சர்வமத தலைவர்களின் பிரார்த்தனைகளும் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மன்னாரில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல் | Tsunami Commemoration Held In Puthukkudiyiruppu

புத்தளத்தில் நினைவேந்தல்

சுனாமியினால் உயிர்நீர்த்தவர்களுக்கு புத்தளத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி மற்றும் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனை இடம்பெற்றது.

2004.12.2ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரழிவால் உயிரிழந்தவர்களை நினைவுகூறி இன்று காலை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மன்னாரில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல் | Tsunami Commemoration Held In Puthukkudiyiruppu

புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்கள், புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள், முப்படையினர் கலந்து கொண்டனர்.

இதன்போது சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்மா சாந்தி வேண்டி புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்களினால் பிரார்த்தனையும் நிகழ்த்தப்பட்டது.

புதுக்குடியிருப்பில் சுனாமி நினைவேந்தல்

சுனாமி ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு (Mullaitivu)- புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

வன்னிகுறோஸ் மற்றும் சுனாமி நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (26) காலை 8.05 மணியளவில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு ஐயனார்கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அநுரவின் திட்டங்கள் வெற்றிபெற்றால் ரணிலுக்கே பெருமை : சாகர பகிரங்கம்

அநுரவின் திட்டங்கள் வெற்றிபெற்றால் ரணிலுக்கே பெருமை : சாகர பகிரங்கம்

பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி 

இதன் பின்னர்  பொது சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றியதுடன் நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மன்னாரில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல் | Tsunami Commemoration Held In Puthukkudiyiruppu

இந்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் (S. Sivamohan), முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வீட்டினுள் நுழைந்து விஷ ஊசி போட்ட நபர் – பரிதாபமாக உயிரிழந்த பெண்

வீட்டினுள் நுழைந்து விஷ ஊசி போட்ட நபர் – பரிதாபமாக உயிரிழந்த பெண்

காலத்தால் மறக்க முடியாத வலி தந்த சுனாமி : 20 வருடம் கழிந்தும் மாறா தொடர்...

காலத்தால் மறக்க முடியாத வலி தந்த சுனாமி : 20 வருடம் கழிந்தும் மாறா தொடர்...


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024