அரங்கேறும் அமித் ஷாவின் விளையாட்டு - விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் திருமாவளவன்
த.வெ.க. தலைவர் விஜய்யை பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தனிப்பெரும் கட்சியாக த.வெ.க.வை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
விஜய்க்கு பெரும்பான்மை
எனவே விஜய்யை பதவியேற்க அனுமதிக்க வேண்டும். ஆனால் கவர்னர் இன்னும் முடிவு எடுக்காமல் குழப்பம் உருவாவதற்கு இடம் கொடுக்கிறார். இது ஏற்புடையதல்ல.

118 எம்எல்ஏக்கள் ஆதரவை காண்பித்துவிட்டு பதவியேற்புக்கு வாருங்கள் என கவர்னர் சொல்ல முடியாது.
த.வெ.க. தலைவர் விஜய்க்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும்.
அமித் ஷா விளையாட்டு தமிழகத்தில் அரங்கேறுகிறது. பா.ஜ.க. தலையீட்டை தமிழகத்தில் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
ஆட்சி அமைக்க ஆதரவு
மக்கள் தீர்ப்பின் படி விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்பதுதான் சரி. எங்களுடன் இணைந்து த.வெ.க ஆட்சியமைக்க விரும்புவதை நாங்கள் பரிசீலிக்கிறோம்.

ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது தொடர்பாக விஜய் கடிதம் எழுதினார். போனில் பேசினார்.
ஆலோசித்து முடிவு செய்வோம் என்று கூறியிருக்கிறோம்.” என்று திருமாவளவன் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |