யாழிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணம் மேற்கொண்டு சாதனை படைத்த இரட்டையர்கள்..!
மலையகத்தைச் சேர்ந்த இரட்டையர்கள், யாழ்ப்பாணம் கோட்டையில் இருந்து, கொழும்பு காலிமுகத்திடல் நோக்கிய நடைபயணத்தை நிறைவுசெய்து சாதனை படைத்துள்ளனர்.
சுமார் 400 கிலோமீற்றர் தூரத்தை, 32 மணித்தியாலங்களில், நடைபயணமாக கடந்து அவர்கள் நிறைவு செய்துள்ளனர்.
பொகவந்தலாவை கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த 31 வயதுடைய, தயாபரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய இரட்டையர்களே இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.
உலக சாதனை சான்றிதழ்
நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில், யாழ்ப்பாணம் கோட்டையில் இருந்து தமது நடைபயணத்தை ஆரம்பித்த அவர்கள், நேற்று பிற்பகல் 2.30 அளவில் கொழும்பு காலிமுகத்திடலை அடைந்து, சாதனை படைத்துள்ளனர்.
பன்னாட்டுச் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம், இந்தச் சாதனையை அங்கீகரித்து, சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் கின்னஸ் சாதனைக்காக சென்ற குறித்த இளைஞர்களிடம் யாழ்.காவல்துறையினர் மோசமான முறையில் நடந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
