டுவிட்டர் கணக்குகளில் மோசடி - விசாரணையை அடுத்து அதிரடி நடவடிக்கை
டுவிட்டர் நிறுவனம், டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்கின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னர் பல்வேறான மாற்றங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் ஒரு கட்டமாக டுவிட்டர் சமூக வலைதளத்தில் மாதாந்தம் 8 டொலர் செலுத்தி பயனர்களால் பயன்படுத்தும் Blue tick முறையை தற்காளிகமாக நிறுவனம் தடைசெய்துள்ளது.
ஆரம்பத்தில் இதற்கான கட்டணம் மாதாந்த சந்தா அடிப்படையில் காணப்பட்டது.
போலியான டுவிட்டர் கணக்கு
முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்ற நம்பகத்தரமான தரப்பினரை பின்தொடர Blue tick முக்கிய அடையாளமாகக் கருதப்பட்டது.
எனினும், கட்டணம் செலுத்தியவர்களில் பலர் போலியான டுவிட்டர் கணக்குகளை வைத்திருந்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறான போலி தரப்பினரின் அடையாளம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் கட்டண அடிப்படையிலான Blue tick செயற்பாடானது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அந் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
