நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் - சாரதி பலி
புதிய இணைப்பு
வாத்துவ, மொரந்துடுவ வீதியில் மெலேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்திருந்த பேருந்து ஒன்றின் சாரதி உயிரிழந்தார்.
இந்த விபத்து இன்று (24) காலை இடம்பெற்றதுடன், இதில் இரண்டு பேருந்து சாரதிகளும் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்து வாத்துவ - மொரந்துடுவ வீதியின் மெலேகம பகுதியில் இடம்பெற்றுள்ளது
அதிர்ஷ்டவசமாக விபத்து நேர்ந்த போது இரண்டு பேருந்துகளிலும் பயணிகள் எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்த இரண்டு பேருந்து சாரதிகளும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சாரதி ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த தலைமுறை ஈழத்தமிழர்களின் பலத்தை சிங்கள தேசத்திற்கு படம்போட்டுக்காட்டிய நாமலின் பிரித்தானிய பயணம்!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |