நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களுக்கு பிணை
புதிய இணைப்பு
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் (காணி) வீரவன்ஷ பெரேரா ஆகிய இருவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு இன்று (11) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த நபர்கள் தலா 2.5 மில்லியன் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
நகர அபிவிருத்தி அதிகார சபையின் (Urban Development Authority) இரண்டு முன்னாள் பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் காணிகளுக்கான முன்னாள் பணிப்பாளர் வீரவன்ஷ பெரேரா ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
