இந்தியாவைச் சேர்ந்த இருவர் கட்டுநாயக்காவில் கைது
இந்தியாவைச் சேர்ந்த 36 வயதுடைய ஆண் மற்றும் 56 வயதுடைய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியுடைய 'குஷ்' என்ற போதைப்பொருளை கொண்டு வந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
விமான நிலையத்திலிருந்து வெளியேறியவேளை கைது
அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த நிலையில் விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள ஒரு பெண்ணின் உத்தரவுக்கமைய இந்த போதைப்பொருளை இருவரும் நாட்டிற்கு கொண்டு வந்ததாக சந்தேக நபர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்து, மலேசியா ஊடாக இலங்கைக்கு வருகை
இருவரும் தாய்லாந்தின் பாங்கொக்கில் இந்த போதைப்பொருளை வாங்கி, மலேசியா சென்று அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
