28 மில்லியன் பெறுமதியான தங்க நகைகளுடன் உள்நாட்டு வர்த்தகர்கள் இருவர் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 28 மில்லியன் பெறுமதியான தங்க நகைகளுடன் உள்நாட்டு வர்த்தகர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (11) காலை காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால், விமான நிலையத்தின் வருகை அறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு சந்தேக நபர்களும் இன்று (11) அதிகாலை 2.20 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமான AI-273 இல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்தனர் என்று கூறப்படுகிறது.
பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த நகைகள்

இவர்களுடைய பொதிகளை சோதனையிடப்பட்ட போதே காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் 01 கிலோ 780 கிராம் எடையுள்ள தங்க நகைகள் அவர்களது பொதிகளில் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
குறித்த சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட நகைகளும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 54 நிமிடங்கள் முன்