மகசின் சிறைச்சாலையில் நிகழ்ந்த துயரம் - ‘சானிடைசர்’ குடித்த இரண்டு கைதிகள் உயிரிழப்பு
death
magazine prison
prisioner
By Jaso
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தொற்று நீக்கி (சானிடைசர்) திரவத்தை பருகிய இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த கைதிகள் இருவரும் ஈரானிய பிரஜைகள் எனச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சரத் ஏக்கநாயக்க(Sarath Ekkanayake) தெரிவித்துள்ளார்.
மேற்படி திரவத்தைப் பருகிய ஈரானிய சிறைக்கைதிகளான மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த 12 பேரும் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதாகி சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்