போதையால் தடுமாறும் தென்னிந்திய திரைத்துறை - அதிர வைக்கும் கைதுகள்
தென்னிந்திய திரைத்துறையில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பாக மேலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தென்னிந்திய திரைத்துறையில் போதைவஸ்து பாவனை தொடர்பாக, பல முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சர்வதேச போதைப்பொருள் விநியோகஸ்தர் என்று கருதப்படும் சென்னையை (Chennai) சேர்ந்த, கெவின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் திடுக்கிடும் தகவல்களை வழங்கியுள்ளார்.
போதைப்பொருட்கள் விற்பனை
முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பில், நடிகர் கிருஷ்ணா அத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தாம் முழு நேர தொழிலாக ஐஸ் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கெவின், விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தமக்கு ஜெய்வீர் என்ற புனைப்பெயர் இருப்பதாக கூறியுள்ள அவர், தென்னிந்திய திரைத்துறையினர் தம்மை பவுடர் ஜெஸ்வீர் என்றே அழைப்பர். என்றும் கெவின் வாக்குமூலம் வழங்கியுள்ளார். நடிகர் - நடிகையரை விட சினிமா பட இயக்குனர்கள், உதவி இயக்குநர்கள் தமது வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்றும் போதைப்பொருள் விநியோகஸ்தரான கெவின் விசாரணையாளர்களிம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நடிகர் - நடிகையர் பிறந்த நாள் நிகழ்வுகள், படங்களின் வெற்றி விழா கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளுக்காகவும் தாம் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர்கள் விசாரணை
தமது நெருங்கிய நண்பரான நடிகர் கிருஷ்ணா அடிக்கடி அவரது நண்பர்களுக்கு விருந்து வழங்குவார் என்றும் போதைப்பொருள் விநியோகஸ்தரான கெவின் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இரவு நேர தூக்கம் தொலைத்து பணிபுரியும் மென்பொருள் நிறுவன ஊழியர்களும், கொக்கைன் அதிகளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
அத்துடன் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் கொக்கைனை விற்றுள்ளதாக கெவின் தகவல் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், கெவின் வழங்கியுள்ள இந்த வாக்குமூலம் தற்போது தென்னிந்திய திரைத்துறையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் காலத்தில் பல நடிகர்கள், இயக்குனர்கள் விசாரணைகளுக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
