யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் தமிழ் நாட்டில் கைது
யாழ்ப்பாணத்திற்கு(jaffna) கஞ்சா கடத்த முயன்றதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு கடற்றொழிலாளர்களை காரைக்காலைச் சேர்ந்த சிறப்பு காவல்துறை குழு கடந்த வியாழக்கிழமை கைது செய்துள்ளது.
யாழ்ப்பாணம்பருத்தித்துறையைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களான எம். மணிமாறன், 28, மற்றும் எம். மணியாரசன், 24 என இவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.
கிடைத்த இரகசிய தகவல்
ஒரு கண்ணாடி இழைப் படகு, ரூபா50,000 ரொக்கம் மற்றும் கைபேசிகள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
உள்ளூர் விநியோகஸ்தர்களிடமிருந்து கஞ்சா வாங்குவதற்காக இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேர் கடல் வழியாக வருவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் தலைமையிலான சிறப்புப் படையின் கூட்டுக் குழு மற்றும் நெராவி காவல்துறையினர் கடலோர ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தினர்.
சந்தேக நபர்கள் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் காணப்பட்ட பின்னர் கருக்கலச்சேரி அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
நீதிமன்றம் அளித்த உத்தரவு
இலங்கைக்கு கஞ்சா கடத்துவதற்காக வந்தவர்களே இருவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
கடந்த மாதம் வவுனியாவைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த ராசு ஆகிய இரு இலங்கையர்களிடமிருந்து 304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கைதுகள் நடந்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் திருவிழா
