பிரித்தானிய பிரதமருக்கு சவாலாகும் இன்றைய தேர்தல்
பிரித்தானியாவில் இன்று இடம்பெற்றுவரும் தேர்தல் ஏற்கனவே அரசியல் நெருக்கடியில் உள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய வகையில் முடிவுகளை வழங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
இங்கிலாந்து பிராந்தியம் உட்பட்ட இன்று காலை 7 மணிமுதல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல்களத்தில் பல ஈழத்தமிழ்பூர்வீக வேட்பார்களும் ஏராளமான வாக்களார்களும் பங்கெடுத்துவருகின்றனர்.
பிரித்தானியாவுக்கும் மிகவும் சிக்கலான ஒரு காலகட்டத்தில் இந்த தேர்தல் வந்துள்ளது.
தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு : சுயாதீனமாக செயற்படாத தமிழ் சட்டத்தரணிகள் பேரவை : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
136 உள்ளாட்சி சபைகள்
இங்கிலாந்தில் உள்ள 136 உள்ளாட்சி சபைகள் மற்றும் ஆறு பெரிய நகரங்களின் முதல்வர் தேர்தல்களும் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ ராஜ்யங்களின் தேசிய நாடாளுமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு இரவு 10 மணிக்கு முடிவடைந்த பின்னர் பல இடங்களில் இரவு முழுவதும் வாக்குகளை எண்ணும், பணி இடம்பெற்று முடிவுகள் அறிவிக்கபடும். பெரும்பாலான முடிவுகள் நாளை பகலில் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தல் ஆளும் தொழிற்கட்சி மீதான ஒரு பொது வாக்கெடுப்பாக மாறுவதால் ஏறகனவே உள்ளூராட்சி மன்றங்களில் தொழிற்கட்சி கொண்டடுள்ள நூற்றுனக்கணக்காக இடங்கள் இடங்கள் இழப்பட்டு தொழிற்கட்சி ஒரு பெரும் தோல்வியை சந்தித்தால் பிரதமர் ஸ்ராமர் கட்சியை வழிநடத்துவது கடினமாகலாம்.
நாளை வெளிப்படும் முடிவுகள் தொழிற்கட்சியில் திடீர் தலைமைத்துப் போட்டிக்கு வழிவகுக்க கூடும்.
2024-ல் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் ஸ்டார்மர் எடுத்தத தொடர்ச்சியான தவறான நடவடிக்கைகளால் இன்றைய தேர்தல்ல நைஜல் பராஜ் தலைமையிலான தீவிர வலதுசாரிக் கட்சியான றிபோர்ம் யுகே எனப்படும் சீர்திருத்த பிரித்தானிய கட்சி நூற்றுக்கணக்கான உள்ளுராட்சிகளில் வெற்றிபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதான எதிர்க்கட்சியான கென்சர்வேடிவ் கட்சியும் இந்த தேர்தலில் பின்னடைவைச் சந்திக்கும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |