உக்ரைனின் பொருளாதார சீரமைப்பிற்கு கைக்கொடுக்கும் ரிஷி சுனக்
உக்ரைன் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் அளவில் உதவி செய்ய போவதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
“சர்வதேச உக்ரைன் மீட்பு மாநாடு 2023” எனும் மாநாட்டின் மூலமாக ரஷ்யாவுடனான போரில் பொருளாதார ரீதியாக நெறுக்கடிகளை சந்தித்திருக்கும் உக்ரைனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காகவே அம்மாநாடு இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், 61 நாடுகளை சேர்ந்த 1000 மேற்பட்ட வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள், உலகளாவிய முதலீட்டாளர்கள் என பலரும் அம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் எதிர்தாக்குதல்
ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து உக்ரைனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரிஷி சுனக் “நட்பு நாடுகளுடன் சேர்ந்து உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் எதிர்தாக்குதலுக்கான ஆதரவை வழங்குவோம்” என தெரிவித்துள்ளார்.
இதுவரையிலும், இங்கிலாந்து, ரஷ்யா உக்ரைன் போர் ஆரம்பித்தது முதல் உக்ரைனுக்கு 347 மில்லியன் பவுண்டு உதவித்தொகையாக அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
