ட்ரோன்கள் வழியாக பாதுகாப்பு புரட்சி: பிரித்தானியாவின் புதிய திட்டம்
பிரித்தானிய (United Kingdom) அரசு ட்ரோன் தொழில்நுட்பத்தில் இரண்டு பில்லியன் பவுண்டு முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில், இராணுவத்தை பத்து மடங்கு அதிக தாக்குதல் திறன்கொண்டதாக மாற்றுவதற்காக இரண்டு பில்லியன் பவுண்டு தொகையை ட்ரோன் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் இந்த திட்டத்தை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டம், உக்ரைனில் நடக்கும் போரில் உருவான நவீன ஆயுத உத்திகள் மற்றும் தொழில்நுட்பங்களை இணைத்து, புதிய ட்ரோன் மையத்தை அமைப்பதையும் நாட்டு பாதுகாப்பை மேம்படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாரிய ஆயுதங்கள்
இது தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பாரிய ஆயுதங்கள் இணைந்து இராணுவத்தை பத்து மடங்கு தாக்கம் கொண்டதாக மாற்றும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பில்லியன் பவுண்டுகள்
அத்தோடு, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரித்தானியா போருக்கு தயாராக இருக்க வேண்டுமெனவும் இது நம்மை பாதுகாக்கும் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன் 15 பில்லியன் பவுண்டுகள் செலவில் புதிய நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் அணு ஆயுதங்கள் மற்றும் அணுசக்தியால் இயங்கும் 12 தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பிற்காக ஒரு பில்லியன் பவுண்டு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஆறு ஆயுத தொழிற்சாலைகள் திறக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
