லண்டனில் நள்ளிரவில் கொடூரக் கொலை - வெளியான புதிய தகவல்கள்!
லண்டனில் இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
Croydon-ல் வசித்து வந்த 89 வயது பெண் கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக செவ்வாய்க்கிழமை இரவு காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் வழங்கப்பட்டதையடுத்து ஆம்புலன்ஸ் குழு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது அப்பெண் உயிரிழந்துவிட்டார் என உறுதி செய்தனர்.
பேரனால் கொலை செய்யப்பட்ட பெண்
இந்நிலையில், அவரை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் அவரின் பேரன் வெருஷன் மனோகரன் வயது 31 என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், கொலை வழக்கில் புதிய தகவல்கள் வந்துள்ளதோடு கொலை செய்யப்பட்ட பெண்ணின் முதல் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சந்தேக நபர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் தற்போது சில விடயங்களை வெளியிட்டுள்ளனர்.
காவல்துறையினர் தெரிவித்திருப்பதாவது,
இந்த கொலை தொடர்பில் முழுமையான தகவல்களை அறிய விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக நாங்கள் வேறு யாரையும் தேடவில்லை. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
தீவிர விசாரணை ஆரம்பம்
சிறப்பு அதிகாரிகள் அவர்களுக்கு உதவியாகவும், ஆதரவாகவும் உள்ளனர். கொலைச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டு கொள்கிறோம் என கூறியுள்ளனர்.
இதன் போது உயிரிழந்தவரின் வீட்டுக்கு அருகே வசிப்பவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அந்த பெண் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவரது கணவர் 2018 இல் இறந்துவிட்டார்.
எனக்கு அவரை தெரியாது, ஆனால் இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 19 வயது இளைஞரான அடம் ஜோன்ஸ் என்பவர் கூறுகையில்,
இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது தெருவில் ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை வாகனம் நின்றிருந்தது.
இந்த சம்பவம் ஒரு கனவு போல உள்ளது. ஏனெனில் என் வீட்டுக்கு அருகிலேயே இந்த கொலை நடந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
