ஐரோப்பிய நாடுகளில் செல்வந்தராக இதோ ஓர் வாய்ப்பு..! £208 மில்லியனை எட்டிய பரிசுத்தொகை
யூரோ மில்லியன்ஸ் லாட்டரியில் £208 மில்லியன் ஜாக்பாட் வெல்லும் அதிஷ்ட வாய்ப்பு இன்னமும் காத்திருக்கிறது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற குலுக்கலில் யாரும் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படாததால், இந்த லொட்டரி பரிசுத் தொகை மேலும் உயர்ந்துள்ளது.
இதனால், செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அடுத்த குலுக்கலில் பரிசுத் தொகை £208 மில்லியனாக அதிரித்துள்ளது.
வரலாற்று வெற்றி
முந்தைய £199 மில்லியன் தொகையும் வெற்றி பெறாத நிலையில், இந்த மெகா ஜாக்பாட் இன்னும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, இந்தப் பெரிய தொகையை வெல்லும் நபர், பிரபல பாடகர்கள் அடெல் மற்றும் ஹாரி ஸ்டைல்ஸை விட அதிக செல்வந்தராக மாறுவார்.மேலும், இது தேசிய லாட்டரி வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய மிகப்பெரிய வெற்றியாகும்.
இது தொடர்பில் யூரோ மில்லியன்ஸ் லாட்டரிக்கான மூத்த ஆலோசகர் ஆண்டி கார்ட்டர் கூறுகையில், “தற்போது ஜாக்பாட் உச்ச வரம்பை எட்டியுள்ளது. எனவே, இதைத் தொடர்ந்து வரும் குலுக்கலில் எந்த கூடுதல் பணமும், வெற்றியாளரின் பரிசுத் தொகையில் நேரடியாக சேர்க்கப்படும்” என்றார்.
இந்த நிலையில், அதன் வெற்றியாளர்கள் ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின், லக்ஸம்பர்க், போர்த்துக்கல், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் எங்கும் பதிவாகளாம்.
அதன்படி, நேற்றைய சீட்டிழுப்பில் எந்த நாட்டிலும் ஜக்பொட் வெற்றியாளர்கள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
