பிரித்தானிய அரசியலில் அதிரடி நகர்வு
பிரித்தானியாவில் கொரோனா முடக்கநிலை இருந்தவேளை தனது பணியகத்தில் விதிமுறைகளை மீறிய விருந்துகளை மையப்படுத்திய நெருக்கடியில் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson) கடுமையாக சிக்கி பதவி விலகும் அழைப்புக்ளை எதிர்நோக்கி வருகிறார்.
இவ்வாறான நெருக்கடியில் சிக்கிய அவருக்குரிய புதிய அடியாக அவரது கென்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று எதிர்கட்சியான தொழிற்கட்சிக்கு தாவியுள்ளார்.
பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மீது நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைக்க கென்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று தயாராகி வரும் நிலையில், இடம்பெற்ற அதிரடி நகர்வாக இந்த கட்சித்தாவல் இடம்பெற்றுள்ளது.
நேற்று பரபரப்பான பின்ன்ணியில் நாடாளுமன்ற அமர்வுகள் கேள்வி நேரத்துடன் இடம்பெற்ற நிலையில் கென்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ்டியன் வேக்போர்ட் தனது அணியில் இருந்து வெளியேறி, எதிர்க்கட்சியான தொழிற்கட்சி அணியுடன் இணைந்திருந்தார்.
பொறிஸ் ஜோன்சன் மீது நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கட்சிக்குள் முன்வைப்பது குறித்து நேற்றுமுன்தினம் ஏழு கென்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள தமக்கிடையில் கலந்து பேசியுள்ள நிலையில் இந்த நகர்வு இடம்பெற்றுள்ளது.
கென்சவெட்டிவ் தரப்பில் 54 நடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கோரும் கடிதங்களை சமர்ப்பித்தால், அது கட்சியில் புதிய தலைமைப் போட்டியை உருவாக்ககூடிய நிலையில், முன்னாள் பிரெக்ஸிட் அமைச்சர் டேவிட் டேவிஸ், நேற்று பொறிஸ் ஜோன்சனை பதவிவிலகுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை எள்ளலுடன் வெளியிட்ட டேவிட் டேவிஸ், நீங்கள் செய்த எல்லா நன்மைகளுக்காகவும், கடவுளின் பெயரால் பதவிவிலகிச் செல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.