பிரித்தானியாவின் அடுத்த பிரதமர்! முதன்மை வேட்பாளராக களமிறக்கப்படும் முக்கிய புள்ளி
பிரித்தானிய பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சியின் தலைமை ஆகிய இரண்டு பதவிகளில் இருந்தும் கெய்ர் ஸ்டார்மர் விலகுவதாக அறித்துள்ள நிலையில் அந்த பதவிகளுக்கு அடுத்து வரவிருப்பவர் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், குறித்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படும் ஒருவராக பிரித்தானியாவின் வடக்கு மன்னர் என அழைக்கப்படும் தொழிலாளர் கட்சியின் அண்டி பர்ன்ஹாம் கருதப்படுகிறார்.
இவர், 1970 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வடமேற்கு இங்கிலாந்தின் மெர்சிசைட் நகரில் பிறந்துள்ளார்.
தலைமைப் பதவிக்கு போட்டி
நீண்டகாலமாக தொழிலாளர் கட்சியில் பயணித்த பர்ன்ஹாம், 2001 முதல் 2017 வரை லே (Leigh) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றியுள்ளார்.

Image Credit: Fortune
இந்த காலக்கட்டத்தில், முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுன் அரசின் தலைமைச் செயலாளர், கலாச்சாரச் செயலாளர் மற்றும் சுகாதாரச் செயலாளர் உள்ளிட்ட பல அமைச்சரவைப் பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.
அதனைதொடர்ந்து, இரண்டுமுறை தொழிலாளர் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட போதும் அந்த இரண்டு முறையும் அவர் வெற்றி பெறவில்லை.
பின்னர், 2017 முதல் 2026 வரை கிரேட்டர் மென்செஸ்டர் பகுதியின் மேயராக பணியாற்றிய நிலையில், குறித்த காலக்கட்டத்தில்தான் பர்ன்ஹாம் என்ற புனைப்பெயரை அவர் பெற்றதாக கூறப்படுகிறது.
2020 ஒக்டோபரில், பிரிட்டனின் வடக்கு பகுதியில் உள்ள மென்செஸ்டர் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்தபோது, போதிய நிதி உதவி இல்லாமல் ஊரடங்கை ஏற்க முடியாது என்று மேயராக இருந்த ஆண்டி பர்ன்ஹாம் போரிஸ் ஜொன்சன் அரசுடன் நேருக்கு நேர் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளார்.
வடக்கின் ராஜா
இவ்வாறு வட பகுதி மக்களின் உரிமைகளுக்காக போராடியதால், ஊடகங்களும், பொதுமக்களும் அவரை வடக்கின் ராஜா என்று அழைக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கிரேட்டர் மென்செஸ்டர் பகுதியில் அமைந்துள்ள மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றபோது அதில் வெற்றிப் பெற்று நாடாளுமன்றத்திற்கு மீண்டும் திரும்பிருந்தார்.
இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு முதல்நாள், “மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் , எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தொழிலாளர் கட்சித் தலைமைப் போட்டியில் நுழைந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு போட்டியாக இருப்பேன் என சவால் விடுத்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இவர் பிரதமர் வேட்பாளராக அந்நாட்டில் முன்னிறுத்தப்படுகிறார்.
ஸ்டார்மர் மீதான அதிருப்தியால், தொழிலாளர் கட்சியை மக்களிடம் மீண்டும் இணைக்கக்கூடிய ஒரு சக்தியாக பர்ன்ஹாமை அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும் வடக்கு ராஜா என்ற பட்டம்பெற்று ஒரு பகுதி மக்களின் ஆதரவை மட்டுமே கொண்டுள்ளதால், அவரது செல்வாக்கு வடக்கு இங்கிலாந்தைத் தாண்டிச் செல்லுமா என்பது தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |