படைத்தளபதிகள் மீதான தடை புலம்பெயர்ந்தவர்களே காரணம் : அலி சப்ரி கண்டுபிடிப்பு

Ali Sabry United Kingdom Tamil diaspora
By Jaso Mar 25, 2025 08:02 PM GMT
Report

 சிறிலங்கா படைத்தளபதிகள் மீதான பிரிட்டனின் தடைக்கு காரணம் பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் செயற்படுகின்றனர் என்பது வெளிப்படையாகியுள்ளது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி(ali sabry) தெரிவித்துள்ளார்

சிறிலங்கா படைத்தளபதிகள் மற்றும் கருணாவிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகள் தொடர்பாக தனது சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

ஐக்கிய இராச்சியம் எங்கள் யுத்தவெற்றிவீரர்களுக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.

முன்னரை விட சுறுசுறுப்பாக செயற்படும் புலம்பெயர்ந்தவர்கள் 

இந்த விடயங்கள் எவையும் வெற்றிடத்தில் நிகழவில்லை.பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர்.

படைத்தளபதிகள் மீதான தடை புலம்பெயர்ந்தவர்களே காரணம் : அலி சப்ரி கண்டுபிடிப்பு | Uk Sanctions On Sri Lankan Military Commanders

எங்களின் அரசியல்வாதிகள் சுயவிருப்பத்துடனோ அல்லது அறியாமையினாலோ அல்லது திட்டமிட்டோ அவர்களின் கரங்களில் சிக்கிக்கொள்வது வருந்தத்தக்க விடயம்.

உலகின் மிகக்கொடூரமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றை தோற்கடித்து, பல தசாப்தங்களாக இரத்தக்களரியை எதிர்கொண்ட எமது தேசத்திற்கு அமைதியையும் ஸ்திரதன்மையையும், கொண்டுவருவதற்கு பொறுப்பானவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் அரசியல் நோக்கத்திற்காக இலாபத்திற்காக ஆபத்தான முறையில் சமரசம் செய்துவருகின்றோம் என்பது எனக்கு உண்மையிலேயே கவலையளிக்கின்றது.

சிறிலங்கா படைத்தளபதிகளுக்கான தடை : அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள மைத்திரி

சிறிலங்கா படைத்தளபதிகளுக்கான தடை : அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள மைத்திரி

  நன்றிகெட்ட தேசம்

ஐக்கியம் சுதந்திரத்திற்காக செய்யப்பட்ட தியாகங்களை மறந்தால் அது எவ்வளவு தூரம் நன்றிகெட்ட தேசமாக இருக்கமுடியும்

படைத்தளபதிகள் மீதான தடை புலம்பெயர்ந்தவர்களே காரணம் : அலி சப்ரி கண்டுபிடிப்பு | Uk Sanctions On Sri Lankan Military Commanders

இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாகவே விளங்கவேண்டும்,இதில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை.

 எங்கள் நாட்டின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டை பேணுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானதாக இருக்கவேண்டும்.

அனைத்து இலங்கையர்களும் இனமதமொழி பேதமின்றி கௌவரம் சமத்துவத்துடன் பரஸ்பர கௌரவத்துடன் வாழும் நாட்டை கட்டியெழுப்பும் அதேவேளை வெளிப்படையான அல்லது நயவஞ்சகமான அனைத்து வகையான பிரிவினை வாதத்தையும் எதிர்ப்பதற்கான எங்களின் கூட்டு தீர்மானத்தை நாங்கள் வலுப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா விதித்துள்ள தடை : கண்டனம் வெளியிட்டுள்ள நாமல்

பிரித்தானியா விதித்துள்ள தடை : கண்டனம் வெளியிட்டுள்ள நாமல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி