பிரித்தானியாவில் சீரற்ற காலநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவின் (United Kingdom) சில பகுதிகளில் இன்றைய தினம் (21.02.2025) கடுமையான வானிலை நிலவும் என பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக பயண இடையூறுகள் மற்றும் ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.
கிழக்கு வடக்கு அயர்லாந்து (காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை) மற்றும் தென்மேற்கு ஸ்காட்லாந்து மற்றும் மேற்கு வேல்ஸ் (காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை) பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று
இந்த பகுதிகளில் மணிக்கு 70 மைல்கள் வரை காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கடலோரப் பகுதிகளில் இந்த பலத்த காற்று ஆபத்தான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஸ்காட்லாந்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மழைப்பொழிவு பயண இடையூறுகள், மின் தடை மற்றும் வெள்ளப்பெருக்குக்கு வழிவகுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
