உக்ரைனுடான அமைதி பேச்சு வார்த்தை: பதிலுக்காக காத்திருக்கும் ரஷ்யா
ஷ்யா (Russia) மற்றும் உக்ரைன் (Ukraine) அமைதிப் பேச்சுவார்த்தையை ஜூன் இரண்டாம் திகதி நடத்த ரஷ்யா முன்மொழிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பேச்சுவார்த்தைக்கான இடமாக துருக்கியின் இஸ்தான்புல் நகரை ரஷ்யா பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergey Lavrov) தெரிவித்துள்ளார்.
நேரடிப் பேச்சுவார்த்தை
ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையேயான முந்தைய நேரடிப் பேச்சுவார்த்தைகள் இஸ்தான்புல்லில் நடந்தன.
ரஷ்யாவின் இந்த புதிய முன்மொழிவுக்கு உக்ரைன் இதுவரை பகிரங்கமாக எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை.
முன்மொழிவு
இந்த முன்மொழிவு குறித்து ரஷ்யாவின் முக்கிய பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், சாத்தியமான தீர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொள்வதற்காக விரைவில் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா ஒரு திகதியையும் இடத்தையும் முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் உடன் அண்மையில் தொலைபேசியில் பேசியதை உறுதிப்படுத்திய அவர், ரஷ்யாவின் இந்த முன்மொழிவுக்கு உக்ரைனிடமிருந்து விரைவான பதிலுக்காகக் காத்திருப்பதாக வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா அரசாங்கங்களை விடவும் விடுதலை புலிகளின் தலைவருக்கு இருந்த அக்கறை : தென்னிலங்கையிலிருந்து ஒலிக்கும் குரல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
