ரஷ்யாவின் ட்ரோன் உற்பத்தி வேகம்: விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கை
ரஷ்யா (Russia) தற்போது ட்ரோன் உற்பத்தி திறனைக் கடுமையாக அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி மேஜர் ஜெனரல் கிறிஸ்தியான் ஃப்ராய்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில், ஒரே நேரத்தில் 2,000 ட்ரோன்கள் தாக்க வாய்ப்பு உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் கருவி
இது உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புக்கு பாரிய சவாலாக அமையும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் வழங்கும் Shahed ட்ரோன்கள் வெறும் 30,000 - 50,000 யூரோ மதிப்பிலேயே இருக்கின்றன ஆனால் அவைகளை அழிக்க பயன்படுத்தப்படும் Patriot ஏவுகணைகளின் விலை ஐந்து மில்லியன் யூரோவிற்கு மேல் என அவர் தெரிவித்துள்ளார்.
இது உக்ரைனுக்குப் பாரிய பொருளாதார சுமையைக் கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிகள்
உக்ரைன் தற்போது சாதாரண துப்பாக்கிகள், எதிர்ப்பு ட்ரோன்கள் மற்றும் மின்னணு போர் கருவிகளைப் பயன்படுத்தி பாதுகாப்பை வலுப்படுத்தி வருகின்றது.
இந்தநிலையில், உக்ரைனுக்கு 2,000 - 4,000 யூரோ செலவில் செயல்படக்கூடிய பாதுகாப்பு அமைப்புகள் தேவை என ஜேர்மன் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா தற்போது உக்ரைனின் பாதுகாப்பு சப்ளைகளை சோர்வடையச் செய்கின்ற நிலையில், இது உக்ரைனின் எதிர்வினையை எதிர்பார்த்தும் திட்டமிடப்பட்ட நடவடிக்கையாகவே இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
