ரஷ்யர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை கதி கலங்க வைத்த உக்ரைன்
ரஷ்யாவில் இன்றைய(01) புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உக்ரைன் ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெர்சான் பிராந்தியத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது உக்ரைன் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக கெர்சான் பகுதி ஆளுநர் விளாடிமிர் சால்டோ தெரிவிக்கையில்,
எதிரிகள் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தினர்
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நமது எதிரிகள் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தினர். கருங்கடல் அருகேயுள்ள கோர்லி பகுதியில் இருந்த ஹோட்டல் மற்றும் விடுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

முதற்கட்டமாக இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதும், 50 பேர் காயமடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மேலும், ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு உக்ரைன் அனுப்பிய 168 ட்ரோன்களை தாக்கி அழித்தது. என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |