வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை (17) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது
உக்ரைன் , ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.
ரஷ்யா மீதான தடை
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
இந்த போரால் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த சூழலில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இன்றைய தினம் ஜனாதிபதி ட்ரம்ப்பை (Donald Trump) சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது உக்ரேனின் பாதுகாப்பு, ஆற்றல் தேவைகள் மற்றும் ரஷ்யா மீதான தடைகளை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
