போரை உடனடியாக நிறுத்துமாறு பாப்பரசர் பிரான்சிஸ் மீண்டும் கோரிக்கை !
பாப்பரசர் பிரான்சிஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் தொடங்கி இன்றுடன் 18 ஆவது நாள் ஆகிறது. இதுவரை நடந்த தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள், படைவீரர்கள் எனப் பலர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த போரை நிறுத்தவும், சமரச பேச்சில் ஈடுபடவும் ஐ. நா சபை கோரிக்கை விடுத்தது. அதேபோல பாப்பரசர் பிரான்சிசும் (Pope Francis) போரை நிறுத்த வேண்டுகோள் விடுத்தார். பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோளை ரஷ்யா ஏற்கவில்லை. நேற்றும் உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
போரினால் குழந்தைகள் பலியாவதை ஒருபோதும் ஏற்க முடியாது. குழந்தைகளின் எதிர்காலம், அவர்களின் பெற்றோர் உயிரிழந்தால், குழந்தைகள் அனாதைகளாகும் நிலை, ஆகியவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள்.
இந்த சிந்தனை உருவானால் போர் நிறுத்தத்திற்கு வழிபிறக்கும். எனவே கடவுளின் பெயரால் போரை நிறுத்துங்கள். அதற்கான ஏற்பாடுகளை தொடங்குகள் என குறிப்பிட்டுள்ளார்.