ரஷ்யாவைச் சுட்டுப் பொசுக்கிய உக்ரேனின் புலனாய்வு அதிசயம்
உண்மையிலே உக்ரைனின் (Ukraine) ஒரு புலனாய்வு அதிசயம் என்றே ரஷ்யாவின் (Russia) வான்படை மீதான இந்தத் தாக்குதலை ஆச்சரியத்துடன் நோக்குகின்றார்கள் ஆய்வாளர்கள்.
அத்தோடு, மிகப் பெரிய புலனாய்வுச் சாதனை என்றும், ஒரு வல்லரசுக்கு எதிராக இதுபோன்ற ஒரு துல்லியமான நடவடிக்கை உலகில் இதுவரை யாராலுமே மேற்கொள்ளப்படவேயில்லை என்றும் அதிசயிக்கின்றார்கள் சர்வதேச போரியல் நோக்கர்கள்.
உக்ரைன் புலனாய்வுப் பிரிவின் வல்லமையை வியப்புடன் பார்க்கின்ற சில ஆய்வாளர்கள், இந்தத் தாக்குதலின் பின்னணியில் சீ.ஐ.ஏ அல்லது வேறு ஐரோப்பிய நாடு ஒன்றின் உளவுப் பிரிவின் கரம் இருந்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்புகின்றார்கள்.
இந்தத் தாக்குதலுக்கு நிச்சயமாகச் செய்மதிகள், செய்மதித் தரவுகள், வழிகாட்டல்கள் இருந்திருக்க வேண்டும்.
அதனால் ஏதோ ஒரு நேட்டோ நாட்டின் உதவியுடன்தான் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
இந்தநிலையில், இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
