போரை உக்ரைன் உடனடியாக நிறுத்தவில்லை என்றால் அழிவு தான் - ஐரோப்பிய நாடு ஒன்று கடும் எச்சரிக்கை!
உக்ரைன் ரஷ்யாவுடனான போரை நிறுத்த வேண்டும் அல்லது மிகப் பெரிய அழிவை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷ்ய போர் தொடர்பான மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில் உக்ரைன் சண்டையை நிறுத்த வேண்டும் அல்லது மிகப்பெரிய அழிவை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெலாரஸ் எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்
அத்துடன் உக்ரைன் ஒருவேளை மிகப்பெரிய உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் என்று நினைத்தால், அதுவும் உக்ரைன் கைகளில் தான் இப்போது உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பெலாரஸ் ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக திகழ்ந்து வருவதுடன், உக்ரைன் மீதான ரஷ்ய போரை ஆரம்பம் முதலே பெலாரஸ் ஆதரித்து வருகிறது.
அத்துடன் போரின் தொடக்க நாட்களில் பெலாரஸ் நாட்டின் எல்லை வழியாகவே உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தினர்.
ஆனால் இதுவரை உக்ரைனுடனான மோதலில் நேரடியாக பெலாரஸ் களமிறங்கவோ அல்லது சொந்த படைகளை ரஷ்யாவிற்கு ஆதரவாக களமிறக்கவோ இல்லை என்றாலும், அது வருங்காலத்தில் மேற்கொள்ளப்படலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
உக்ரைனுக்கு அழிவுதான்
மேலும் இது மிகவும் கடினமானது தான், சிக்கலானது தான், எனவே உக்ரைன் சண்டையை நிறுத்த வேண்டும் . இல்லையென்றால் உக்ரைனுக்கு அழிவே ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எப்படி இருப்பினும் இந்த சந்திப்பில் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, போர் தொடங்குவதற்கு உக்ரைனோ அல்லது அதிபர் ஜெலென்ஸ்கியோ தான் காரணம் என்று குற்றம் சாட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Lukashenko urged Ukraine to "stop" and said it would otherwise be "destroyed completely.
— Anton Gerashchenko (@Gerashchenko_en) November 24, 2022
Theater of absurd. pic.twitter.com/2FcN8uVtSd