செப்ரெம்பரில் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து : கடும் எச்சரிக்கை விடுத்த ரணில்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம்( UN Human Rights Office) உக்ரைனையும்(ukraine) இலங்கையையும்(sri lanka) வித்தியாசமாக நடத்துவதன் மூலம் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவதாகவும் எனவே தற்போதைய அரசாங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)தெரிவித்துள்ளார்.
"இந்த ஆண்டு செப்ரெம்பரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இலங்கை தொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இலங்கை அரசாங்கமும் பிற பங்குதாரர்களும் இந்த விடயத்தை இப்போதே மிக கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்," என்று நேற்றையதினம்(25) தனது அலுவலகத்தில் தன்னை சந்தித்த இளைஞர்கள் குழுவிடம் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"உலகளாவிய அரசியல் ரஷ்யாவுடனான உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யர்கள் தங்கள் நோக்கங்களை வென்றெடுக்க தியாகங்களைச் செய்துள்ளனர். நெப்போலியனை தோற்கடிக்க அவர்கள் தங்கள் மூலதனத்தை எரித்தனர்.
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குறித்து பல ஐரோப்பிய நாடுகள் மௌனம்
பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) குறித்து மௌனம் காத்து வருகின்றன. உக்ரைன் தனது ஜனாதிபதித் தேர்தலை நடத்தாதது குறித்து அவர்கள் மௌனம் காத்து வருகின்றனர். இராணுவச் சட்டம் நடைமுறையில் இருக்கும்போது பொதுத் தேர்தலை ஒத்திவைக்க அந்த நாட்டின் அரசியலமைப்பு ஏற்பாடு செய்கிறது. இருப்பினும், ஜனாதிபதித் தேர்தல் பற்றி அரசியலமைப்பில் எதுவும் கூறப்படவில்லை.
முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து தனது தேர்தலை ஒத்திவைத்தது. இது ஹவுஸ் ஒஃப் கொமன்ஸ் மற்றும் ஹவுஸ் ஒஃப் லோர்ட்ஸ் ஆதரவுடன் செய்யப்பட்டது. கொன்சர்வேடிவ், தொழிலாளர் மற்றும் லிபரல் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலை(Winston Churchill) உற்சாகப்படுத்திய பின்னர் அவர் மீண்டும் பிரதமரானார். இங்கிலாந்தில் எழுதப்பட்ட சட்டம் இல்லை, ”என்று அவர் நினைவு கூர்ந்தார்.
மோதல்கள் நிகழ்ந்த போதிலும் தேர்தலை நடத்தினோம்
“இலங்கையில் வடக்கில் விடுதலைப் புலிகள் மற்றும் தெற்கில் ஜேவிபி சண்டையிட்ட நேரத்தில் நாங்கள் தேர்தல்களை நடத்தினோம். இலங்கை சரியான நேரத்தில் தேர்தல்களை நடத்தியது. 2024 இல் நாங்கள் தேர்தல்களை நடத்தினோம்.
தற்போது ஜேவிபி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. ஜேவிபி தேர்தலில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், அவர்களை ஒரு ஜனநாயக அமைப்புக்குள் கொண்டு வர முடிந்தது.
இலங்கை தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்
இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் இரட்டைத் தரங்களைப் பின்பற்றுகிறது, அவர்கள் இலங்கையை வித்தியாசமாக நடத்துகிறார்கள். குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை குறித்து ஒரு தீர்மானத்தை எடுக்க இருப்பதால், தற்போதைய அரசாங்கமும் நாம் அனைவரும் இந்த சூழ்நிலையை கவனமாக கையாளவேணடும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 மணி நேரம் முன்
