கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Erimalai
கிளிநொச்சி உமையாள் புரம் பகுதியில் இன்றைய தினம் (4) பிற்பகல் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சிறுவர்கள் தமது பொழுதுபோக்கு நடவடிக்கைக்காக நீர் ஓடும் வாய்க்கால் அருகாமையில் சென்ற போது வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்றினை அவதானித்து உள்ளனர்
ஆபத்தான நிலையில் காணப்பட்ட கைக்குண்டு
உடனடியாக அச் சிறுவர்கள் கிளிநொச்சி காவல்துறைக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் ஆபத்தான நிலையில் காணப்பட்ட கைக்குண்டினை உரிய பாதுகாப்புடன் அகற்றுவதற்கு கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவுக்கு தகவலை அனுப்பியுள்ளனர்

நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை குறித்த இடத்தில் பாதுகாப்புக்காக கிளிநொச்சி காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகயில் ஈடுபட்டு வருகின்றனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி