பிரித்தானியாவின் புதிய பிரதமராக தேர்வானதும் லிஸ் டிரஸ்ஸூக்கு சிறிலங்காவிலிருந்து அனுப்பப்பட்ட செய்தி!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள லிஸ் ட்ரஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் மாற்று திட்டத்தில் இணைய ரணிலின் இணக்கம்

மேலும் ஜிஎஸ்பி சலுகைக்குப் பதிலாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் நிலையான வளர்ச்சியை நோக்காகக் கொண்டு பிரித்தானியா நடைமுறைப்படுத்தவுள்ள புதிய மாற்றுத் திட்டமான DCTS ஊடாக இரு நாட்டு பங்காளித்துவத்தையும் வலுப்படுத்த முடியும் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
I congratulate @trussliz on being elected the leader of the Conservative Party and the Prime Minister of the United Kingdom. As we strengthen our partnership through the DCTS, I am confident that bilateral & cultural relations between Sri Lanka & the UK will continue to grow.
— Ranil Wickremesinghe (@RW_UNP) September 6, 2022
இதேவேளை இலங்கை மற்றும் பிரித்தானியா இடையே இருதரப்பு மற்றும் கலாச்சார உறவுகள் தொடர்ந்து வளரும் என தான் நம்புவதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 5 மணி நேரம் முன்