உற்றுநோக்கலை ஏற்படுத்திய ஐ.நா அமர்வு - முதல் நாளே சிறிலங்காவிற்கு அழுத்தம்

Human Rights Council United Nations
By Kalaimathy Sep 12, 2022 01:37 PM GMT
Report

புதிய இணைப்பு

ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்று ஆரம்பித்த 51ஆவது அமர்வின் முதலாம் நாள் நிகழ்ச்சி நிரலில் இலங்கை நிலவரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமை உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.

முதல் நாள் அமர்வில் இலங்கை தொடர்பாக இரண்டு தடவைகள் உரையாற்றிய பதில் மனித உரிமை ஆணையாளர் நடா அல் - நஷிப் இலங்கை மீது ஐ.நா மனித உரிமை பேரவை தொடர்ந்தும் கண்காணிப்பை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்ததுடன், இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்கள் நிலைநாட்டப்படவேண்டியது அவசியம் என குறிப்பிட்டிருந்த போதிலும் சிறிலங்கா இவற்றை நிராகரித்துள்ளது.

பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்துக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட நகர்வுடன் ஆரம்பமான இன்றைய அமர்வில் முதலாவது விடயமாக மியன்மார் நிலவரங்கள் எடுக்கப்பட்ட போதிலும் இலங்கை குறித்த விடயங்களே மதியம் வரை நீடித்திருந்தது.

இதுவரை மனித உரிமை பேரவையின் ஆணையாளராக பதவி வகித்த மிச்செல் பச்லெட் கடந்த மாத இறுதியுடன் தனது பதவிக் காலத்தை முடித்துள்ள நிலையில் மனித உரிமை பேரவையின் பதில் ஆணையாளர் நடா அல் நஷீப், இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தார்.


அந்த அறிக்கையில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் நல்லிணக்கத்திற்கு தேவையான உரையாடலை உருவாக்குவதற்கும் புதிய அரசாங்கத்தை ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனநாயகம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் சீர்திருத்தங்கள் முக்கியமென தெரிவித்துள்ள அவர், இலங்கையில் போர்க்குற்றங்கள் உட்பட்ட குற்றங்களை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கும் சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

இலங்கையின் நிலைமை இன்னமும் மிகவும் பலவீனமாக இருப்பதால் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், ஆணையாளரின் அறிக்கையிடலை அடுத்து அதன் மீதான விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது முதலில் உரையாற்றிய சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, ஜெனிவாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை மக்களின் இறையாண்மையை மீறுவதால் அதனை தமது நாடு நிராகரிப்பதாகவும், அதேபோல மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான வெளியக விசாரணை பரிந்துரைகளையும் திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும் கூறினார்.

உற்றுநோக்கலை ஏற்படுத்திய ஐ.நா அமர்வு - முதல் நாளே சிறிலங்காவிற்கு அழுத்தம் | United Nation Human Rights Council Session 51

இதன் பின்னர் இலங்கை தீர்மானத்தின் இணை அனுசரணை நாடுகளான அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உட்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் ஆணையாளரின் அறிக்கையை வரவேற்றதுடன் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக விழுமியங்கள் பேணப்படவேண்டும் எனவும் பொறுப்புக்கூறல் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளனர். ஆயினும் சிறிலங்கா ஆதரவு நாடுகள் வழமைபோலவே அதற்கு ஆதரவு வழங்கியுள்ளன.

இரண்டாம் இணைப்பு

ஐ.நா மனித உரிமையில் இன்று ஆரம்பித்த 51வது அமர்வின் முதலாம் நாள் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விடயம் எடுக்கபட்டமை சிறிலங்காவுக்கு பாதகமாக மாறியுள்ளது.

அமர்வு ஆரம்பித்த பின்னர் முதலாவது விடயமாக மியன்மார் நிலவரங்கள் எடுக்கப்பட்ட பின்னர், உடனடியாகவே சிறிலங்கா தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கபட்டது.

இந்த அறிக்கையை வெளியிட்ட பதில் ஆணையாளர், இலங்கையின் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து சிறிலங்கா அரசதரப்பு தனது தரப்பில் கருத்துதெரிவித்த பின்னர், மேற்குலக நாடுகள் இலங்கையில் ஜனநாயகம் திரும்பவேண்டும், பொறுப்புக்கூறப்படவேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்திய அதேவேளை, சிறிலங்கா ஆதரவு நாடுகள் சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தன. 

முதலாம் இணைப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் சற்று முன்னர் ஆரம்பமானது.

இந்த அமர்வின் ஆரம்பமாக மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பான 47 நாடுகள், சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் இன்று தொடங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கின்றன.

உற்றுநோக்கலை ஏற்படுத்திய ஐ.நா அமர்வு - முதல் நாளே சிறிலங்காவிற்கு அழுத்தம் | United Nation Human Rights Council Session 51

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு இன்று (திங்கட்கிழமை) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று தொடங்கும் அமர்வு, ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான விரிவான அறிக்கை இன்று மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Witten, Germany

05 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

08 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

சரவணை, மட்டக்களப்பு

15 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, அளவெட்டி

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், London, United Kingdom

18 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Ratingen, Germany

12 Apr, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Wimbledon, United Kingdom

08 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், சரவணை, Paris, France

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வயாவிளான், Lyss, Switzerland

16 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, இராமநாதபுரம்

19 Mar, 2024
நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம்

18 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbrücken, Germany, London, United Kingdom

01 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்குவேலி, கொட்டாஞ்சேனை

20 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், ஜேர்மனி, Germany

19 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

வேலணை, சுதுமலை, Manippay, Drammen, Norway

16 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, கட்டப்பிராய்

29 Apr, 2023
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பெல்ஜியம், Belgium, Gloucester, United Kingdom

20 Apr, 2021
மரண அறிவித்தல்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, சித்தன்கேணி, சுவிஸ், Switzerland

19 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நியூஸ்லாந்து, New Zealand

15 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Village-Neuf, France

14 Apr, 2023