இலங்கைக்கு உதவ தயாராகிறது ஐக்கிய நாடுகள் சபை! வெளியான தகவல்
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய நாடுகள் சபை, உணவு மற்றும் மருந்துகளுக்கான முறையான சர்வதேச வேண்டுகோளை எதிர்வரும் புதன்கிழமை விடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச அமைப்புக்களின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் பிரதமர் விக்ரமசிங்க நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) இலங்கை பிரதிநிதி விம்லேந்திர ஷரன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) துணை பிரதிநிதி மாலின் ஹெர்விக் ஆகியோருடன் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு.
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 16 மணி நேரம் முன்