அமெரிக்காவுக்கே ஆபத்தான மனிதர் ட்ரம்ப்
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் என நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபை மூலம் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கான வாக்கெடுப்பு இன்று அதிகாலை நடைபெற உள்ளது. அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் நடைமுறை தொடர்பாக வாக்க்டுப்பு நடைபெற உள்ள நிலையில் இது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி பேசியதாவது:- நாட்டுக்கு எதிராக அதிபர் டிரம்ப் வன்முறையை தூண்டிவிட்டுள்ளார்.
அவர் தனது பதவியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். நாம் விரும்பும் நமது அமெரிக்க நாட்டின் தற்போதைய ஆபத்து டொனால்ட் டிரம்ப் தான் என்றார்.