அமெரிக்காவுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாது! அறிவித்தது இலங்கை
colombo
america
By Vasanth
மிலேனியம் செலேன்ஞ்ச் கோப்பரேஸன்; கம்பெக்ட் எனப்படும் எம்.சீ.சீ உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருந்தது. எவ்வாறெனினும், இந்த உடன்படிக்கையை கைச்சாத்திடப்பட மாட்டாது என சட்ட மா அதிபர் தப்புலா லிவேரா உச்ச நீதிமன்றிற்கு இன்று அறிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் தேர்தல் காலங்களில் உறுதிமொழி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.