விஜய் விவகாரத்தில் மரபை மீறிய அநுர : ஐ.தே.க குற்றச்சாட்டு
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அனுப்பிய வாழ்த்துச் செய்தி குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளதுடன், ராஜதந்திர மரபுகள் குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், இந்திய மாநிலமான தமிழகத்தின் முதலமைச்சருக்கு இலங்கை ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்ததைக் கண்டு தாங்கள் "ஆச்சரியமடைந்ததாக" ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.
நாட்டின் தலைவர்களுக்கு மட்டுமே வாழ்த்துச் செய்திகள் உரியவை
ஒரு நாட்டின் தலைவர் என்ற முறையில், இத்தகைய வாழ்த்துச் செய்திகள் பொதுவாக சக நாட்டுத் தலைவர்களுக்கு மட்டுமே உரியவை என்றும், வெளிநாட்டு மாகாண அல்லது மாநிலத் தலைவர்களுக்கு அல்ல என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

மற்றைய மாநில தலைவர்களுக்கு ஏன் வாழ்த்து அனுப்பவில்லை
மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மற்றும் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்ட, சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற இந்திய மாநிலத் தலைவர்களுக்கு ஜனாதிபதி திசாநாயக்க ஏன் இதேபோன்ற செய்திகளை அனுப்பவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி மேலும் கேள்வி எழுப்பியுள்ளது.

இலங்கையும் தமிழ்நாடும் ஆழமான வரலாற்று, பண்பாட்டு மற்றும் பொருளாதார உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், பரந்த இந்தியா-இலங்கை கூட்டாண்மைக்குள் மேலும் வலுவான ஒத்துழைப்புக்கான நம்பிக்கையை வெளிப்படுத்தியும், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதற்கு ஜனாதிபதி திசாநாயக்க முன்னதாக வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |