புதிய முகங்களுடன் புதுப் பொலிவு பெறவுள்ள ஐ.தே.கட்சி : ரணில் வெளியிட்ட அறிவிப்பு
புதிய முகங்களை கட்சிப் பதவிகளுக்கு அறிமுகப்படுத்தி புதிய தோற்றத்துடன் கூடிய ஐக்கிய தேசிய கட்சியை(UNP) உருவாக்கப் போவதாக ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) இன்று(29) அறிவித்தார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடந்த நிகழ்வில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் விழாவிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார குழு
“அண்மையில் நடந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை ஒரு குழு கையாண்டது. இந்தக் குழுவில் துணைத் தலைவர் ருவான் விஜயவர்தன, உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம், தவிசாளர் வஜிர அபேவர்தன, துணைத் தவிசாளர் நவீன் திஸாநாயக்க மற்றும் பொதுச் செயலாளர் தலதா அதுகோரள ஆகியோர் உள்ளனர்.
கட்சியை புதியவர்கள் வழிநடத்த வேண்டும்
இதன்படி கட்சியை புதுப்பிக்கும் பணியை இதே குழுவிடம் ஒப்படைத்துள்ளேன். அவர்கள் புதிய தோற்றத்துடன் கூடிய ஐக்கிய தேசிய கட்சியை உருவாக்குவார்கள்.
“கட்சியை புதியவர்கள் வழிநடத்த வேண்டும் என்பதற்காக கட்சியை புதுப்பிக்க வேண்டிய தேவை உள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
