தமிழினம் உலகத்தில் வாழும் வரை மாவீரர்களின் நாள் எழுச்சி நாளே!.. ஜனநாயக போராளிகள் கட்சி (காணொளி)
தமிழ் இனம் உலகில் வாழும் வரையில் மண்ணிற்காக விதைக்கப்பட்ட மாவீரர்களின் நாள் நினைவுகூரப்படும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இராசையா கதிர் (Rasaiya kathir) தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாளினை ஏனைய தேவைகளுக்காக யாரும் பயன்படுத்துவதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்களின் தமிழ்தேசிய விடுதலைக்காக இந்த மண்ணில் இலங்கை அரசாங்கத்துடன் போராடி வீரமரணம் அடைந்த மாவீரர்களை நினைவு கொள்வதற்காக தமிழீழ தேசியத் தலைவரினால் நியமிக்கப்பட்ட நாளிலே அந்த மாவீரர் நாள் மண்ணில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
மாவீரர் நாள் என்பது ஒரு துக்க நாள் அல்ல மாவீரர் நாள் ஒரு எழுச்சி நாளாகத்தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,