மட்டக்களப்பில் தனது பிரதான நோக்கத்தை அறிவித்த ரணில்
நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticoloa) மாவட்டத்தில் இன்று (22) 27,595 குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அதிபர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அதிபர், ‘’இந்நாட்டின் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு மீண்டும் அபிவிருத்தி அடையும் போது அந்த மக்களை ஒருபோதும் மறக்க மாட்டோம். அதன்படி மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி உரிமை வழங்கும் உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம்.
காணி உரிமை
தற்போது விவசாயிகளுக்கு காணி உரிமை வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.
இந்தக் காணி உறுதிப்பத்திரங்களை வினைத்திறனாக வழங்க சம்பந்தப்பட்ட அனைத்து அரசாங்க அதிகாரிகளையும் கிராமங்களுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டத்தையும் நாங்கள் தயாரித்துள்ளோம்.
அப்போது, இந்த காணி உறுதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் மாவட்ட செயலகத்திற்கோ பிரதேச செயலகத்திற்கோ செல்லத் தேவையில்லை. எதிர்வரும் திங்கட்கிழமை அந்த வேலைத்திட்டத்தை தொடங்கி விரைவில் நிறைவு செய்ய அறிவுறுத்தியுள்ளேன்.
எனக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான் உள்ளது. அந்த உரிமையை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். காணி உரிமையை பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் ... |
![Gallery](https://cdn.ibcstack.com/article/a3f4bebd-3d65-436b-9529-252f0113cf02/24-6676ccbe21f8b.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e99a9133-cf49-4443-ba0f-f8648dbdeefd/24-6676ccbeaa45b.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/9c8bc522-9023-4d2b-acca-3a1d915e5eda/24-6676ccbf2e033.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/b5f05187-9c8b-46e2-a45c-4dc310d574b9/24-6676ccbf9fc51.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e079911e-213c-4bbc-b9a6-262dc04b24f0/24-6676ccc026de8.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/4d336ad2-33fc-4a93-9aa9-af124cf34273/24-6676ccc090645.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/71a97187-7fcc-4e1b-a90b-783cad7b799a/24-6676ccc10fa86.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d7b55234-c9d7-4708-8fe7-70455c81a0f4/24-6676ccc183873.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/6b20fede-d552-4632-b651-0eb0b249ee88/24-6676ccc2033e7.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள்](https://cdn.ibcstack.com/article/6a2df536-6236-4cba-8f99-2439b81db733/24-667d3eb68c81c-md.webp)
யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் 23 மணி நேரம் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)