நாமலை சந்தித்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) மற்றும் நாமல் ராஜபக்ச எம்.பி உள்ளிட்ட ஏனைய அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று (14) காலை 10 மணியளவில் சிறிலங்கா பொதுஜன பெரமுன (Sri Lanka Podujana Peramuna) அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அரசு சாரா நிறுவனங்களின் நிதி
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பரஸ்பர நலன் சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டதோடு, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் கடைப்பிடிக்கப்பட்ட தலையிடாத வெளியுறவுக் கொள்கைக் கொள்கையையும், வரி செலுத்துவோர் நிதியைப் பயன்படுத்துவதில் அதிக வெளிப்படைத்தன்மைக்கு அவர் விடுத்த அழைப்பையும் நாங்கள் பாராட்டுகிறோம்.
மேலும், அமெரிக்க வரி செலுத்துவோர் வளங்களை ஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி, இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத அரசு சாரா நிறுவனங்கள் USAID நிதியைப் பயன்படுத்துவதை விசாரிக்க ஒரு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்மொழிவு குறித்து சுங்கிற்கு விளக்கினோம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமன்ன, சி.பி. ரத்நாயக்க, ஜயந்த கெட்டகொட மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)