மீண்டும் தாக்குவோம் : ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
அணுசக்தி திட்டங்களை தொடர்ந்தால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என ஈரானுக்கு(iran) அமெரிக்க ஜனாதிபதி டொல்ட் ட்ரம்ப்(donald trump) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. அவர்களால் நீண்ட காலம் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியாது. பல தசாப்தங்களுக்கு அவர்களின் அணுசக்தி திட்டங்கள் பின்னடைவை சந்தித்து உள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நல்லபடியாக முன்னோக்கி செல்கிறது.
இரண்டாம் உலகப் போர் எப்படி முடிவிற்கு வந்தது
ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதால் தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. ஹிரோஷிமா, நாகசாயி ஆகியவற்றை உதாரணமாக பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால், தற்போதும் அமெரிக்கா நடத்திய தாக்குதலால் தான் போர் முடிவுக்கு வந்தது.
அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும்
பாலஸ்தீனத்தின் காசாவில் வளர்ச்சி காணப்படுகிறது. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக மேற்கு ஆசியாவில் நேர்மறையான தாக்கம் ஏற்பட்டு உள்ளது.
ஈரான் மீண்டும் அணுசக்தி திட்டங்களை தொடர்ந்தால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
