ஈரானியர்களால் அனுரவுக்கு அமெரிக்கா செக்! தஞ்சமடைந்தவர்களின் சீருடை களைவுக்கு அழுத்தம்
Diplomatic cables எனப்படும் ராஜதந்திரக் கேபிள்கள் அல்லது ராஜதந்திரத் தந்திகளில் இருக்கும் செய்திகள் பொதுவாக அதியுயர் இரகசியப் பேணல்களுக்கு உரியவையாக இருந்தாலும், அவற்றில் சில அவ்வப்போது கசிவுகளுக்கு உள்ளாகிவிடுகின்றன.
அந்தவகையில் நேற்று கசிந்த ஒரு செய்தி, இப்போது இந்தியப் பெருங்கடலில் உள்ள இலங்கையையும் மறைமுகமாகச் சிண்டு முடிந்து அதன் நடுநிலைமையைச் சோதனை செய்கிறது.
வாஷிங்டனிலிருந்து கொழும்புக்கு அனுப்பப்பட்ட இந்தச் செய்தி, அமெரிக்காவின் வெளியுறவுத் துறையின் உள்ளகத் தொடர்பாடலில் இருப்பதை உலகின் முக்கிய ஊடக நிறுவனமான ராய்ட்டர்ஸ் நேற்று கண்டறிந்தது.
இந்த கேபிள் கசிவை நோக்கும்போது, வழியில் கிடந்த ஓணானை (மன்னிக்கவும், கடலில் கிடந்த ஓணானை) மடியில் எடுத்து வைத்த கதையாகச் சிறிலங்கா அதற்குப் பின்னர் சில அழுத்தங்களை எதிர்நோக்குவது தெரிகிறது.
சிறிலங்காவையும் அதன் அரசதலைவர் அநுர குமார திசாநாயக்கவையும் பொறுத்தவரை நடுநிலையுடனும் மனிதாபிமான நோக்கத்துடனும் ஈரானியப் போர்க்கப்பலையும் அதில் இருந்தவர்களையும் பொறுப்பில் எடுத்ததான ஒரு நிலைப்பாடு உள்ளது.
இது மனிதாபிமான ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம்தான்.
ஆனால், இப்போது சிக்கல் அதுவல்ல மாறாக இனி இலங்கையில் உள்ள ஈரானியர்களை என்ன செய்ய வேண்டும் எனக் கொழும்புக்கு அமெரிக்கா வழங்கும் அழுத்தங்கள்தான் சிக்கலாகின்றன.
குறிப்பாக இவர்கள் அனைவரையும் ஈரானியக் கடற்படையிலிருந்து விலக வைக்க வேண்டும், ஈரானியக் கடற்படையினராக அவர்களை மீண்டும் திருப்பி அனுப்பக் கூடாது, இவர்களை ஊடகங்களில் தோன்ற அனுமதிக்கக் கூடாது மற்றும் ஈரானியப் பரப்புரைகளுக்கு உதவ அனுமதிக்கக் கூடாது என வாஷிங்டனிலிருந்து செய்திகள் வந்துள்ளன.
இந்த நிலையில், இந்தியாவின் ரைசினா (Raisina Dialogue) மாநாட்டிற்குச் சென்ற சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், ஈரானால் தமக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் தொடர்பாகவும் டெல்லியின் சில ஆலோசனைகளைச் சாடைமாடையாகப் பெற்றமையும் தெரிந்த நிலையில், இந்த விடயங்கள் மற்றும் மத்திய கிழக்குப் போர் நிலவரங்களைத் தழுவி வருகிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |