H-1B விசா கட்டணங்களை உயர்த்திய அமெரிக்கா... மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படப்போகும் சிக்கல்
மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் இந்திய பணியாளர்கள் அதிகமாக பயன்படுத்தும் H-1B விசா கட்டணங்களை அமெரிக்கா (USA) உயர்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, H-1B விசா கட்டணங்களை 250 டொலர் வரை (இந்திய மதிப்பில் 21,000 ரூபா) அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
இது பாதுகாப்பு வைப்புத்தொகை என்ற பெயரில் அறிவிடப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க குடியேற்றச் சட்டங்கள்
ஆண்டுதோறும் பணவீக்கத்திற்கு ஏற்ப உயர்த்தப்படும் இந்த கட்டணமானது 2026ம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.
மேலும் விண்ணப்பதாரர்கள் சில அளவுகோல்களை பூர்த்தி செய்தால் அந்தத் தொகை திரும்பப் பெறப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அமெரிக்க குடியேற்றச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்ற ட்ரம்ப் (Trump) நிர்வாகத்தின் முயற்சியாக இது கருதப்படுகிறது.
டொனால்ட் ட்ரம்பின் முடிவு
அதாவது, அமெரிக்கா விசா காலக்கெடு முடிந்தவுடன் நீடிப்பு கோராமல் அமெரிக்காவை விட்டு வெளியேறினால் இந்த தொகை திரும்ப கொடுக்கப்படும்.
ஜூலை 4ஆம் திகதி அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முடிவின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சில சட்டங்களில் விசா கட்டண உயர்வும் ஒன்றாகும்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதிலும், வெளிநாடுகளில் இருந்து சட்டபூர்வமாக அமெரிக்காவுக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதிலும் ட்ரம்ப் தீவிரமாக இருப்பதுடன் அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை அவர் பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
